முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'அந்தரங்க புகைப்படம்.. 3 வருஷம் ஒரே வீடு..' பிக்பாஸ் பிரபலத்தின் கணவர் மீது ஈரான் மாணவி பரபரப்பு புகார்!

'அந்தரங்க புகைப்படம்.. 3 வருஷம் ஒரே வீடு..' பிக்பாஸ் பிரபலத்தின் கணவர் மீது ஈரான் மாணவி பரபரப்பு புகார்!

ஈரானில் இருந்து பார்மசி படிக்க வந்த மாணவியை திருமணம் செய்து சொல்வதாக ஏமாற்றி வன்கொடுமை செய்துவிட்டு மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • 17

    'அந்தரங்க புகைப்படம்.. 3 வருஷம் ஒரே வீடு..' பிக்பாஸ் பிரபலத்தின் கணவர் மீது ஈரான் மாணவி பரபரப்பு புகார்!

    ஹிந்தி பிக் பாஸ் 14 மற்றும் 15 இல் பங்கேற்ற ராக்கி சாவந்தின் கணவர் அடில் கான் துரானி மீது  ஈரானிய மாணவி ஒருவர் மைசூரில் வன்கொடுமை மற்றும்  மிரட்டல் போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    'அந்தரங்க புகைப்படம்.. 3 வருஷம் ஒரே வீடு..' பிக்பாஸ் பிரபலத்தின் கணவர் மீது ஈரான் மாணவி பரபரப்பு புகார்!

    ராக்கி சாவந்த் தந்து முன்னாள் கணவர் ரிதேஷை விவாகரத்து செய்தபிறகு தன்னை விட 5 வயது சிறிவரான ஆதில்  கான் துரானி எனும் மைசூரை சேர்ந்த தொழிலதிபரை காதலித்து வந்தார். கடந்த ஆண்டிலேயே தங்களுக்கு திருமணம் முடிந்ததாக ஜனவரி மாதம் அவர்களது திருமண படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தார். இதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் கூறினார்.

    MORE
    GALLERIES

  • 37

    'அந்தரங்க புகைப்படம்.. 3 வருஷம் ஒரே வீடு..' பிக்பாஸ் பிரபலத்தின் கணவர் மீது ஈரான் மாணவி பரபரப்பு புகார்!

    திருமணம் ஆன கொஞ்ச நாளிலேயே ஆதில் கான் துரானி தன்னை துன்புறுத்துவதாகவும், மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தாக்குதல், ஏமாற்றுதல் மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவு ஆகியவற்றுக்காக ஓஷிவாரா காவல்துறை அவரை கைது செய்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    'அந்தரங்க புகைப்படம்.. 3 வருஷம் ஒரே வீடு..' பிக்பாஸ் பிரபலத்தின் கணவர் மீது ஈரான் மாணவி பரபரப்பு புகார்!

    இந்நிலையில் ஈரானில் இருந்து பார்மசி படிக்க வந்த மாணவியை திருமணம் செய்து சொல்வதாக ஏமாற்றி  வன்கொடுமை செய்துவிட்டு, வெளியில் சொன்னால் அந்தரங்க படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியாக போலீசில் புதிய வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    'அந்தரங்க புகைப்படம்.. 3 வருஷம் ஒரே வீடு..' பிக்பாஸ் பிரபலத்தின் கணவர் மீது ஈரான் மாணவி பரபரப்பு புகார்!

    2018 ஆம் ஆண்டு வி.வி.புரத்தில் உணவகம் நடத்தி வந்த ஆதில்கானுடன் இரானிய பெண்ணிற்கு நட்பு ஏற்பட்டது. விரைவில், இருவரும் நெருக்கமாகி அதில் அவளை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனை அடுத்து இருவரும் மூன்று வருடங்களாக யாதவகிரியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்துவந்ததாக அந்தப் பெண் கூறினார்.

    MORE
    GALLERIES

  • 67

    'அந்தரங்க புகைப்படம்.. 3 வருஷம் ஒரே வீடு..' பிக்பாஸ் பிரபலத்தின் கணவர் மீது ஈரான் மாணவி பரபரப்பு புகார்!

    சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு, அந்த பெண் திருமணத்திற்கு வற்புறுத்தியபோது, ​​​​அதை மறுத்து நடந்ததை வெளியில் சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும்,
    தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினால் ஈரானில் உள்ள பெற்றோருக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்

    MORE
    GALLERIES

  • 77

    'அந்தரங்க புகைப்படம்.. 3 வருஷம் ஒரே வீடு..' பிக்பாஸ் பிரபலத்தின் கணவர் மீது ஈரான் மாணவி பரபரப்பு புகார்!

    இதன் அடிப்படையில் ஐபிசி 376 (கற்பழிப்பு), 417 (ஏமாற்றுதல் தண்டனை), 420 (ஏமாற்றுதல்), 504 (வேண்டுமென்றே அவமதித்தல்), 506 (உயிர் அச்சுறுத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்” என்று நரசிம்மராஜா பிரிவு ஏசிபி அஸ்வத் நாராயண் கூறினார்.

    MORE
    GALLERIES