முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

Actor Soori : புரோட்டா காமெடியில் பேமஸாகி ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தைப்பிடித்த காமெடி நடிகர் சூரியின் ஆரம்ப கால வாழ்க்கை மிகவும் ரணமானது.

  • News18
  • 114

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    புரோட்டா காமெடியில் பேமஸாகி ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தைப்பிடித்த காமெடி நடிகர் சூரியின் ஆரம்ப கால வாழ்க்கை மிகவும் ரணமானது.

    MORE
    GALLERIES

  • 214

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    “பந்தயத்துக்கு நான் ரெடி“ வாங்க ஆரம்பிக்கலாம் என அசால்ட்டாக 50 புரோட்டாவை சாப்பிடும் போட்டியில் எதார்த்தமாக நடித்து திரைத்துறைக்குள் என்ட்ரியாகி பேமஸானவர் தான் நடிகர் சூரி. எவ்வித பின்புலம் இல்லாமல் சினிமாவில் என்ட்ரியாவதற்கு இவர் பட்ட கஷ்டங்கள் தான் மிகவும் ரணமானது.

    MORE
    GALLERIES

  • 314

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    மதுரையில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமத்தில் முத்துசாமி மற்றும் சேங்கையரசி தம்பதியர்களுக்கு ஆறு மகன்களில் ஒருவராக பிறந்தார் நடிகர் சூரி. 7 ஆம் வகுப்பு வரை படித்த சூரி அதற்கு மேல் படிப்பு வரவில்லை என பள்ளிக்குச் செல்லவில்லை. வறுமையில் வாடும் தனது குடும்பத்தை காப்பதற்கு என்ன வேலை என்றாலும் சலிக்காமல் செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 414

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    தன்னிடம் உள்ள நடிக்கும் மற்றும் நடனமாடும் திறனை வைத்து ஊர்ப்பக்கம் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வாராம். பின்னர் இந்த திறமையை வைத்து திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டு மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்பினார் சூரி.

    MORE
    GALLERIES

  • 514

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    சென்னை சென்று சினிமாவில் நடிப்பதற்காக ஒவ்வொரு இடமாக ஏறி இறங்கிய போதும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் வயிற்று பசிக்காக சினிமா தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்ட இவர் லாரி கிளீனர், பெயிண்ட் அடிக்கும் வேலை என கிடைத்த வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

    MORE
    GALLERIES

  • 614

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    இப்படித்தான் ஒரு நாள், மந்திரவாசல் என்கின்ற நாடகத்திற்காக மின் வேலைகள் செய்ய எலக்ட்ரீசியனாக சென்ற இவர், நாடகத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்தார். இது தான் சென்னை வந்து இவரின் பயணத்தைத் தொடங்க ஆரம்பமாக அமைந்தது.

    MORE
    GALLERIES

  • 714

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    திரைத்துறையில் பேமஸ் ஆவதற்கு முன்னதாக புகழ் பெற்ற திருமதி செல்வம், சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சிறு சிறு வேடத்தில் நடித்தார் என்றால் நம்ப முடிகிறதா? இதோடு மட்டுமின்றி வெள்ளத்திரையில் சங்கமம், ஜேம்ஸ்பாண்டு, வின்னர், தீபாவளி போன்ற திரைப்படங்களில் வடிவேலுவுடன் சேர்ந்து சிறிய சிறிய வேடங்களில் நடித்திருந்தார் நடிகர் சூரி. இதுப்போன்று பல திரைப்படங்களில் நடித்த சூரிக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

    MORE
    GALLERIES

  • 814

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு. அதிலும் புரோட்டோவை வாழ்க்கையில் பிடிக்காத சூரியை 50 புரோட்டோ சாப்பிடும் போட்டியில் கலந்துக்கொள்ளும் சீன்ல மாஸ் கட்டியிருப்பார்.

    MORE
    GALLERIES

  • 914

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    “போட்டிக்கு நாங்க ரெடி,. வாங்க சாப்பிடலாம் எனவும், கோட்ட அழி திரும்பவும் போட்டியை ஆரம்பிக்கலாம்“ என்ற வசனங்களைப் பேசி நடித்த சூரிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

    MORE
    GALLERIES

  • 1014

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    வெண்ணிலா கபடிக்குழு வெற்றியைத்தொடர்ந்து பல பட வாய்ப்புகள் சூரிக்கு குவியத் தொடங்கியது. குறிப்பாக சிவகார்த்திக்கேயனுடன் மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறமையை தட்டித் தூக்கி எறிந்திருப்பார். இந்த இருவரும் ஒவ்வொரு படத்தில் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இருக்காது.

    MORE
    GALLERIES

  • 1114

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    இதோடு தேசிங்கு ராஜா, புஷ்பா புருஷனாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார் சூரி. இதுப்போன்று பல்வேறு தமிழ் திரைப்படங்களில் தனக்கென ஓர் இடத்தைப்பெற்றுள்ள சூரி குறுகிய காலத்தில் வடிவேலு போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையான காமெடி நடிகராக வலம் வருகிறார் சூரி.

    MORE
    GALLERIES

  • 1214

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    இவ்வாறு மிக முக்கியமான காமெடி நடிகராக திகழ்ந்து வந்த சூரி, “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர் சூரியின் நடிப்பு அசத்தலாக இருந்ததாக பலரும் கூறினார்கள்.

    MORE
    GALLERIES

  • 1314

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சூரி 2006-ம் ஆண்டு ஆர்யாவின் நடிப்பில் வெளியான கலாபக் காதலன் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி சென்றது குறித்து தெரிவித்துள்ளார். அதில்,  ஒவ்வொருவராக ஆடிஷனரில் கலந்து கொண்டு நடித்து காண்பிக்க அடுத்ததாக நான் உள்ளே சென்றேன். ஆனால் நான் நடித்துக் காண்பிக்கும் முன்பே கீழே மயங்கி விழுந்துவிட்டேன். அங்கு இருந்தவர்கள் எனக்கு தண்ணீரை மூஞ்சியில் தெளித்து விட்டு மயக்கத்தில் இருந்து எழுப்பி உங்களுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார்கள்.

    MORE
    GALLERIES

  • 1414

    ஆர்யாவின் படத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது... வேதனையை பகிர்ந்த சூரி - என்ன நடந்தது தெரியுமா?

    அதன் பிறகு இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால் தான் எனக்கு மயக்கம் வந்துவிட்டது அதை விடுங்க சார் நான் நடித்துக் காட்டுகிறேன் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறினேன். ஆனால் அங்கு இருந்தவர்கள் எனக்கு சாப்பாடு மட்டும் வாங்கி கொடுத்துவிட்டு வாய்ப்பை தரவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES