ரஜினிகாந்த் ஜெயிலர், தனுஷ் வாத்தி, சிவகார்த்திகேயன் அயலான், விக்ரம் பொன்னியின் செல்வன் 2, kamal haasan indian 2, suriya 42" width="1200" height="667" /> தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி, ராஜன்.கே, சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன். கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படம் வருகிற 17 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் கொடுத்த படம் அலா வைகுந்தபுரமுலு. இது ஹிந்தியில் நடிகர் கார்த்திக் ஆர்யனை நாயகனாக கொண்டு ’ஷேஜாதா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ரோஹித் தவான் இயக்கிய ஷேஜாதா என்ற இந்தப் படத்தில் க்ரிதி சனோன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இயக்குநர் முரளி கிஷோர் அப்புரு இயக்கத்தில் நடிகர் கிரண் அப்பாவரம் நடித்துள்ள ’வினரோ பாக்யமு விஷ்ணு’ படம் மகாசிவராத்திரி ஸ்பெஷலாக பிப்ரவரி 18ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஜிஏ2 பிக்சர்ஸ் பேனரில் பன்னி வாசு தயாரித்துள்ள இந்த படத்திற்கு சைதன் பரத்வாஜ் இசையமைப்பாளர். வினரோ பாக்யம் விஷ்ணு கதா படத்தில் காஷ்மீரா பர்தேஷி நாயகியாக நடித்துள்ளார், மேலும் இப்படத்தில் முரளி ஷர்மாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சந்தோஷ் ஷோபன் மற்றும் கௌரி கிஷன் நடித்துள்ள ’ஸ்ரீதேவி சோபன் பாபு’ திரைப்படம் மகா சிவராத்திரி முன்னிட்டு பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாக உள்ளது. பிரசாந்த் குமார் திம்மாலா எழுதி இயக்கிய இந்த படத்திற்கு சையத் கம்ரன் இசையமைத்துள்ளார். மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா கொனிடேலா படத்தை தயாரித்துள்ளார்.