நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், இயக்குநர் கே.விஸ்வநாத் இறுதி சடங்கில் கனத்த மனதுடன் கலந்துகொண்டேன். இவருக்கு நிகர் யாரும் இல்லை. திரையுலகில் வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கிறார். இன்று தெலுங்கு சினிமா சர்வதேச அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது. ஆர்ஆர்ஆர் படத்துக்கு நன்றி. ஆனால் அதற்கு அடித்தளம் அமைத்தவர் கே.விஸ்வநாத். அவர் தெலுங்கு சினிமாவை கலாச்சாரம், இசையுடன் வடிவமைத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இயக்குநர் கே.விஸ்வநாத் தெலுங்கு சினிமாவில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டு சென்றிருக்கிறார். இந்தியா மற்றும் தெலுங்கு சினிமாவுக்கும் எனக்கும் தனிப்பட்ட இழப்பு. தனித்துவமான, காலத்தை கடந்த படைப்புகளைக் கொடுத்தவர். இவர் என்றும் வாழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், நாம் மற்றொரு கலைஞரை இழந்துவிட்டோம். அவரது கலைக்காகவும் சினிமா மீதான அவர் கொண்ட காதலுக்காகவும் இயக்குநர் கே.விஸ்வநாத் என்றும் நினைவு கூறப்படுவார். அவர் படத்தில் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவரது படங்களுக்கு சிறந்த ரசிகை. என்று குறிப்பிட்டுள்ளார்.