சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மன நல மருத்துவரிடமும் சுஷாந்த் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். சுஷாந்த் சிங்கும் நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்துவந்தனர். சுஷாந்த்தின் மரணத்தில் ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
அதற்கேற்ப சுஷாந்த் சிங்கின் தந்தை கேகே சிங், நடிகை ரியா சக்ரபோர்த்தி தனது மகனை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவருக்கு போதை மருந்து கொடுத்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்துவந்தது. நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோக் கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சிறையில் இருந்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
அவரது உடலில் நிறைய மார்க்குகள் இருந்தன. குறிப்பாக அவரது கழுத்தில் 2 முதல் 3 மார்க்குகள் இருந்தன. இதனைப் பார்த்தபோது என் உயர் அதிகாரிக்கு இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினேன். அப்போது முடிந்த வரை சில புகைப்படங்கள் எடுத்து பின் அவரது உடலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படி அவர் எனக்கு அறிவுறுத்தினார்'' என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.