தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், விஜய்யின் படங்களையே நடிகை சாய் பல்லவி நிராகரித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தவர் சாய் பல்லவி. மலையாளத்தில் பரவலாக அறியப்பட்ட சாய் பல்லவி தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களில் மட்டுமே சாய் பல்லவி நடித்து வருகிறார். மாரி 2 படத்தில் தனுஷுடன் இவர் ஆட்டம் போட்ட ரவுடி பேபி பாடல், 1.40 பில்லியன் (1400 மில்லியன்) பார்வையை யூடியூபில் கடந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் ஹிட்டான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படத்தை சாய் பல்லவி நிராகரித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகினார்களாம். ஆனால், தனக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டர் என்பதால், வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தனக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டர் என்பதால், வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. துணிவு படத்திலும் அஜித்திற்கு சாய் பல்லவியை ஜோடியாக்க படக்குழு முடிவு செய்திருந்தார்களாம். இந்த கேரக்டர் தனக்கு ஏற்றதாக இருக்காது என்று கருதி, சாய் பல்லவி நிராகரித்து விட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. துணிவு, வாரிசு படங்கள் வெளியாகி ஒன்றரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அவற்றை நிரகாரித்த சாய் பல்லவி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் பல்லவி.