முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நட்சத்திர ஹோட்டலில் கூண்டுக்குள் பறவைகள்.. கடுப்பான நடிகை ஸ்ரேயா!

நட்சத்திர ஹோட்டலில் கூண்டுக்குள் பறவைகள்.. கடுப்பான நடிகை ஸ்ரேயா!

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பிரபல ஹோட்டல் ஒன்றை கேள்வி எழுப்பியுள்ளார்.

  • 17

    நட்சத்திர ஹோட்டலில் கூண்டுக்குள் பறவைகள்.. கடுப்பான நடிகை ஸ்ரேயா!

    தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண் . இவர் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம், கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பி முன்னணி நடிகையானார்

    MORE
    GALLERIES

  • 27

    நட்சத்திர ஹோட்டலில் கூண்டுக்குள் பறவைகள்.. கடுப்பான நடிகை ஸ்ரேயா!

    திருமணம் ஆகி குழந்தை பிறந்தநிலையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஸ்ரேயா.இவர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளதையடுத்து மிகவும் உற்சாகமடைந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 37

    நட்சத்திர ஹோட்டலில் கூண்டுக்குள் பறவைகள்.. கடுப்பான நடிகை ஸ்ரேயா!

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் கன்னட மொழியில் கப்ஜா என்ற படம் வெளியாகி உள்ளது. ஆர் சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் உபேந்திரா நடித்துள்ளார். அவருடன் இணைந்து ஸ்ரேயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    நட்சத்திர ஹோட்டலில் கூண்டுக்குள் பறவைகள்.. கடுப்பான நடிகை ஸ்ரேயா!

    இந்நிலையில், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இவர் சமீபத்தில், மும்பை அருகிலுள்ள  நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்கு கூண்டுக்குள் பறவைகளை அடைத்து வைத்துள்ளனர். அதை வீடியோ எடுத்துள்ள ஸ்ரேயா, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 57

    நட்சத்திர ஹோட்டலில் கூண்டுக்குள் பறவைகள்.. கடுப்பான நடிகை ஸ்ரேயா!

    அந்த வீடியோவில் பேசிய அவர் ''நீங்கள் பறவைகள் ஆர்வலராக இருந்தால் அவற்றை இப்படி சிறைப்பிடித்து வைக்கக்கூடாது. பறவைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய கூண்டில் இத்தனை பறவைகளா? இப்படி பறவைகளை கூண்டில் அடைத்து வைத்திருப்பது சட்டப்பூர்வமானதா?'' என்று கேட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 67

    நட்சத்திர ஹோட்டலில் கூண்டுக்குள் பறவைகள்.. கடுப்பான நடிகை ஸ்ரேயா!

    மேலும், "நட்சத்திர ஓட்டலிலோ, வீடுகளிலோ பிராணிகளை கூண்டில் அடைத்து பொறுப்பற்ற முறையில் வளர்க்கிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல். செல்லப்பிராணிகள் வளர்க்க ஆசைப்பட்டால் அவற்றை மூச்சுத்திணறும் கூண்டில் அடைக்காமல் அவற்றுக்கு தனி இடத்தை ஏற்பாடு செய்யவேண்டும்'' என்றார்.

    MORE
    GALLERIES

  • 77

    நட்சத்திர ஹோட்டலில் கூண்டுக்குள் பறவைகள்.. கடுப்பான நடிகை ஸ்ரேயா!

    இதற்கு பலர் ஆதரவாகவும் விளக்கம் அளிக்கும் வகையிலும் பதில் அளித்து வந்தனர். ஒரு சிலர் , ‘அவை வெளிநாட்டுப் பறவைகள். இங்கு விடுவித்தால், உயிர் வாழாது' என்று தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலளித்த ஸ்ரேயா, “பறவைகளை ஏன் வியாபாரமாக்க வேண்டும்? வேறு நாட்டுக்கு கொண்டு வந்து அதை ஏன் கூண்டில் அடைத்து வைக்க வேண்டும்? இதுபோன்ற வெளிநாட்டுப் பறவைகளை வாங்காமல் இருப்பதுதான் நல்லது என்பதை சுட்டிக்காட்ட முயன்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES