இந்நிலையில் பிரபல இணைய ஊடகத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், “பலரும் அவனே ஏமாத்திட்டு போயிட்டான். உனக்கு இந்த குழந்தை வேண்டாம்ன்னு அட்வைஸ் பண்ணாங்க. எந்த உயிரையும் கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. கடவுள் கொடுத்த இந்த குழந்தையை பெற்றெடுக்கவே விரும்பினேன். 4 மாசத்துலயே பிரேக் எடுக்க விரும்பினேன். ஆனால் என் வாழ்க்கையில் என்னென்னவோ நடந்துவிட்டது. அதெல்லாம் உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அதன் பிறகு பொருளாதார ரீதியாக நான் வேலை செய்ய வேண்டிய சூழல் வந்தது. இப்போது 9-வது மாதம் நடந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 10-15 நாட்களில் குழந்தை பிறந்துவிடும். ஆனால் இன்னும் கூட ஓய்வெடுக்காமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறாள். அதனால் இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். அவனை நல்ல மனிதனாக வளர்ப்பேன். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுப்பேன்” என்று முன்னதாக தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திவ்யா தனக்கு குழந்தை பிறந்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார். அந்தப் பதிவில், இந்த காத்திருப்பு நீண்டது ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்தது, என்ன நடந்தது என்பதற்காக அல்ல, ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதற்காக. மேலும் விசித்திரக் கதைகளைப் போல என்றென்றும் உன் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். உன்னை காதலிக்கிறேன் என் அன்பு தேவதை, என் அழகான பெண் குழந்தை என தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.