இவர் முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு அக்னேனி நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளியான ‘ஆத்ம கௌரவம்’ என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரும் வெற்றி அடைந்ததால் தெலுங்கு துறையில் கவனிக்கத்தக்க இயக்குனராக வளர்ந்தார் கே.விஸ்வநாத். ஏராளமான படங்களை இயக்கி சாதனைபடைத்துள்ளார்.
விஸ்வநாத் இயக்கிய சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய திரைப்படங்கள் இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்படங்களாக அறியப்படுகின்றன. இதில் சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து படங்களில் கமல்ஹாசன் நாயகனாக நடித்தார். மூன்று மொழிகளில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
1965இல் இருந்து சினிமா துறையில் இயக்குனர், நடிகர் என பிஸியாக இருந்த கே.விஸ்வநாத் வயது மூப்பின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய 92 ஆவது வயதில் கே.விஸ்வநாத் காலமானார். இவருடைய மறைவுக்கு இந்திய திரையுலகில் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.