ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிய ரியா விஸ்வநாதன், ஜீ தமிழின் புதிய சீரியலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஆல்யா மானசா விலகியதும், சந்தியாவாக நடிக்க ஒப்பந்தமானார் ரியா விஸ்வநாதன். 1 வருடம் கடந்த நிலையில் சமீபத்தில் அதிலிருந்து விலகினார். சீரியலை விட்டு தான் விலகவில்லை என்றும், எந்த முன்னறிவிப்பும் இன்றி தான் நீக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் தெரிவித்தார் ரியா. இந்நிலையில் தற்போது அவர், ஜீ தமிழ் சேனலின் புதிய சீரியலில் நடிக்கவிருக்கிறாராம். சண்டக்கோழி என தலைப்பிடப்பட்டுள்ள இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.