நடிகை ராஷ்மிகா மந்தனா புதிதாக தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக நடிகைகள் பலரும் சொந்தத் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா, ப்ளம் என்ற அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இத்தகவலை அவரே ட்விட்டரில் வெளியிட்டதையடுத்து, ராஷ்மிகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.