முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பஞ்சு அருணாசலம் முயற்சியால் ரஜினிக்கு கிடைத்த ஹிட் படம்!

பஞ்சு அருணாசலம் முயற்சியால் ரஜினிக்கு கிடைத்த ஹிட் படம்!

1986 இல் ஆர்.சுந்தர்ராஜன் விஜயகாந்தை வைத்து எடுத்த அம்மன் கோவில் கிழக்காலே படத்தின் கதையை ரஜினியை மனதில் வைத்தே எழுதியிருந்தார். அந்த நேரம் பல காரணங்களால் ரஜினி நடிக்க முடியாமல் போக, விஜயகாந்த் நடித்தார். படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

  • 110

    பஞ்சு அருணாசலம் முயற்சியால் ரஜினிக்கு கிடைத்த ஹிட் படம்!

    1980 இல் வெளிவந்த முரட்டுக்காளைக்குப் பிறகு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வருடத்துக்கு இரண்டு மூன்று படங்களிலாவது நடித்தார். 1981 இல் கழுகு, நெற்றிக்கண், ராணுவ வீரன் என மூன்று படங்கள். 1982 இல் போக்கிரி ராஜா, புதுக்கவிதை, எங்கேயோ கேட்ட குரல் என மூன்று படங்கள். 1983 இல் பாயும் புலி, அடுத்த வாரிசு. 1984 இல் நல்லவனுக்கு நல்லவன், 1985 இல் ஸ்ரீ ராகவேந்திரா, 1986 இல் மிஸ்டர் பாரத் என அந்த மூன்று வருடங்கள் மட்டும் தலா ஒரு படம். அதற்கடுத்த வருடம் வேலைக்காரன், மனிதன், 1988 இல் குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன்.

    MORE
    GALLERIES

  • 210

    பஞ்சு அருணாசலம் முயற்சியால் ரஜினிக்கு கிடைத்த ஹிட் படம்!

    இந்தப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாகவும், இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரின் பாவலர் கிரியேஷன்ஸ் படத்தைத் தயாரிப்பதாகவும் முடிவானது. பொதுவாக இந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களின் உரிமை வாங்கி அதனை ரஜினியை வைத்து தமிழில் ரீமேக் செய்வார்கள். இந்தமுறை அப்படி எதுவும் அமையவில்லை. கதைப்பஞ்சம்.

    MORE
    GALLERIES

  • 310

    பஞ்சு அருணாசலம் முயற்சியால் ரஜினிக்கு கிடைத்த ஹிட் படம்!

    இந்த நேரம் பஞ்சு அருணாசலம் ஆர்.சுந்தர்ராஜனிடம் கதை இருக்கிறதா என்று கேட்க, அவரும் ஒரே தோற்றமுள்ள இருவரின் ஆள்மாறாட்டக் கதையை கூறியுள்ளார். கதை என்றால் நெடுங்கதையல்ல, சும்மா ஒன் லைன். அதில் ரஜினிக்கான ஸ்கோப் இருப்பதை தெரிந்து கொண்ட பஞ்சு அருணாசலம், ரஜினியை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 410

    பஞ்சு அருணாசலம் முயற்சியால் ரஜினிக்கு கிடைத்த ஹிட் படம்!

    பிறகு ஆர்.சுந்தர்ராஜன் கதையை டெவலப் செய்து கூற, எஸ்.பி.முத்துராமனுடன்தான் நிறைய படம் பண்ணிவிட்டோம். இனியும் பண்ணப் போறோம். ஏன் இந்தக் கதையை ஆர்.சுந்தர்ராஜனை வைத்தே இயக்கக் கூடாது என்று ரஜினி அபிப்ராயப்பட ஆர்.சுந்தர்ராஜனுக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    MORE
    GALLERIES

  • 510

    பஞ்சு அருணாசலம் முயற்சியால் ரஜினிக்கு கிடைத்த ஹிட் படம்!

    1986 இல் ஆர்.சுந்தர்ராஜன் விஜயகாந்தை வைத்து எடுத்த அம்மன் கோவில் கிழக்காலே படத்தின் கதையை ரஜினியை மனதில் வைத்தே எழுதியிருந்தார். அந்த நேரம் பல காரணங்களால் ரஜினி நடிக்க முடியாமல் போக, விஜயகாந்த் நடித்தார். படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    MORE
    GALLERIES

  • 610

    பஞ்சு அருணாசலம் முயற்சியால் ரஜினிக்கு கிடைத்த ஹிட் படம்!

    ராஜாதி ராஜாவில் கிராமத்து முறைப்பெண் வேடத்தில் ரேவதியும், பட்டணத்து ராதா வேடத்தில் ரூபிணியும் நடிப்பதாக இருந்தது. பிறகு அவர்கள் மாற்றப்பட்டு முறையே நதியாவும், ராதாவும் நடித்தனர். இந்த ஒரு படம்தான் நதியா ரஜினியுடன் நடித்தது. அதேபோல் ராதா ரஜினியுடன் நடித்த கடைசிப் படமும் இதுதான்.

    MORE
    GALLERIES

  • 710

    பஞ்சு அருணாசலம் முயற்சியால் ரஜினிக்கு கிடைத்த ஹிட் படம்!

    ராஜாதி ராஜா வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. ரஜினி படத்துக்குரிய அனைத்து அம்சங்களும் கொண்ட படங்களுள் ஒன்றாக இன்றளவும் இப்படம் கருதப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த இன்னொருவர் இளையராஜா.

    MORE
    GALLERIES

  • 810

    பஞ்சு அருணாசலம் முயற்சியால் ரஜினிக்கு கிடைத்த ஹிட் படம்!

    அவரது இசையில் மீனம்மா மீனம்மா..., மாமா உன் பொண்ணைக் கொடு..., எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா..., வா வா மஞ்சள் மலரே..., அடி ஆத்துக்குள்ள அத்தி மரம்... என அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன.

    MORE
    GALLERIES

  • 910

    பஞ்சு அருணாசலம் முயற்சியால் ரஜினிக்கு கிடைத்த ஹிட் படம்!

    ரஜினி கூறியது போலவே, இந்தப் படம் முடியும் முன்பே ஏவிஎம் தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் தந்தார். வழக்கமான ரஜினி படமாக இல்லாமல் வித்தியாசமாக அதனை எடுக்க வேண்டும் என்று குழந்தைகளை வைத்து எடுத்தனர். அதுதான் ராஜா சின்ன ரோஜா.

    MORE
    GALLERIES

  • 1010

    பஞ்சு அருணாசலம் முயற்சியால் ரஜினிக்கு கிடைத்த ஹிட் படம்!

    1989 மார்ச் 4 ஆம் தேதி இதே நாளில் வெளியான ராஜாதி ராஜா இன்று 34 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

    MORE
    GALLERIES