14 மாதங்களாக தன்னை தயாரிப்பாளர் ஒருவர் கடுமையாக சித்ரவதை செய்ததாக பிரபல நடிகை ஃப்ளோரா சைனி குற்றம்சாட்டியுள்ளார். தயாரிப்பாளரிடம் தான் நரக வேதனையை அனுபவித்ததாக ஃப்ளோரா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃப்ளோரா சைனி இந்தி மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்த் நடித்த கஜேந்திரா படத்தில் இவர் அறிமுகம் ஆனார். ரஜினியின் குசேலன், சிம்புவின் குஸ்தி, திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட படங்களிலும் ஃப்ளோரா நடித்திருக்கிறார். ஒரு தயாரிப்பாளரிடம் காதலில் விழுந்ததால் தனது வாழ்க்கையே தடம்புரண்டதாக ஃப்ளோரா கூறியுள்ளார். அந்த தயாரிப்பாளர் 14 மாதம் சினிமாவிம் நடிக்கவிடாமல் செய்ததாகவும், இந்த காலகட்டத்தில் சித்ரவதைக்கு ஆளானதாகவும் வேதனை தெரிவித்துள்ளார் ஃப்ளோரா. தயாரிப்பாளரிடம் நரக வேதனையை அனுபவித்ததாக ஃப்ளோரா கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் இருந்து தப்பி ஓடி வந்து விட்டதாக கூறியுள்ள ஃப்ளோரா, தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஃப்ளோரா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.