இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தமிழில் நடிகர் விஜய் உடன் தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்த பிரியங்கா பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். டைம் ஊடகத்தின் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்கள் மற்றும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்தார்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்புமிக்க நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனிப்பட்ட விசயங்களுக்கு மதிப்பு அளிக்க கேட்டுகொள்கிறோம், மிக்க நன்றி’ என்று தெரிவித்துள்ளனர்.
என்ன குழந்தை பிறந்துள்ளது என்பது குறித்து பிரியங்கா- நிக் ஜோன்ஸ் தம்பதியினர் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், அமெரிக்க ஊடகமாக TMZ, இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமையன்று குழந்தை பிறந்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.