மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஐஸ்வர்ய லக்ஷ்மி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர். இதற்கிடையே பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தள படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அந்தப் படங்கள் தற்போது லைக்ஸை குவித்து வருகின்றன.