முகப்பு » புகைப்பட செய்தி » ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

மொகல் - லே - ஆசம் திரைப்படத்தை அனார்கலி என்ற பெயரில் தமிழில்  மொழிமாற்றம் செய்த போது, லதா மங்கேஷ்கர் பாடிய அனைத்துப் பாடல்களையும் ஸ்வர்ணலதா பாடினார்.

  • News18
  • 115

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாலும் பழமும் படத்தை இந்தியில் ரீமேக் செய்த ஸ்ரீதர், இசைக்காக நௌஸத் அலியிடம் செல்ல, பாலும் பழமும் பாடல்களைக் கேட்ட நௌஸத், இவ்வளவு சிறந்த இசையை என்னால் மாற்ற முடியாது என திருப்பியனுப்பியதுடன், மெல்லிசை மன்னர்களின் இசையை பாராட்டி கடிதமும் எழுதினார். பிறகு மெல்லிசை மன்னர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஸ்ரீதர் படத்துக்கு இசையமைத்துத் தந்தார்.

    MORE
    GALLERIES

  • 215

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    இந்தத் தகவலை எழுதிய சில தினங்களில் மீண்டும் நௌஸத் அலி குறித்து பேச வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. காரணம், பாடகி ஸ்வர்ணலதா. நமது குரலரசி ஸ்வர்ணலதா மறைந்து இன்று 12 வருடங்கள் ஆகிறது. 2010 செப்டம்பர் 12 ஆம் தேதி இதே தினத்தில் அவர் மறைந்தார்.

    MORE
    GALLERIES

  • 315

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    நுரையீரல் தொற்றுக்கு அவர் பல மாதங்களாக சிகிச்சை எடுத்துவந்த நிலையில் அவரது மரணம் சம்பவித்தது. அவருக்கு வந்த நோயை இடியோபதி நுரையீல் நோய் என்கிறது மருத்துவ உலகம். காரண காரியம் சொல்ல முடியாத நோய்களை இடியோபதி என்பார்கள். இசையை மூச்சாகக் கொண்டவருக்கு நுரையீரல் நோய் தொற்றால் மரணம் என்பது ஓர் அவல நகைமுரண்.

    MORE
    GALLERIES

  • 415

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    ஸ்வர்ணலதாவின் பூர்வீகம் கேரளா. அங்குதான் பிறந்தார். அவரது தந்தை ஹார்மோனிய இசைக்கலைஞர். அதனால், இசை கேட்டு வளர்ந்த பால்யம் அவருடையது. 3 வயதிலேயே கர்நாடக சங்கீதம் கற்க ஆரம்பித்துள்ளார். ஹார்மோனியம் மற்றும் கீபோர்ட் வாசிக்கவும் அவருக்குத் தெரியும்.

    MORE
    GALLERIES

  • 515

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    தொழில் நிமித்தமாக அவரது குடும்பம் கர்நாடகாவுக்கு குடிபெயர்ந்ததால் அங்கேயே கல்வி கற்றார். பிறகு இசை வாய்ப்புகளுக்காக சென்னையில் குடியேறினர்.

    MORE
    GALLERIES

  • 615

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    சினிமாவில் முதல் பாடல், நீதிக்குத் தண்டனை படத்தில் இடம்பெற்ற, சின்னஞ்சிறு கிளியே... என்ற பாரதியார் பாடல். யேசுதாஸுடன் இணைந்து பாடினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.

    MORE
    GALLERIES

  • 715

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    இந்தப் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்க, கலைஞர் கருணாநிதி வசனம் எழுதினார். அப்போது எம்ஜிஆர் முதல்வர். படம் பல தடைகளை சந்தித்தது. அது இன்னொரு சுவாரஸியமான சம்பவம்.

    MORE
    GALLERIES

  • 815

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    ஸ்வர்ணலதா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, பெங்காலி, ஒரியா, பஞ்சாபி உள்பட பல மொழிகளில் ஆறாயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 915

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    சத்ரியனில் வரும், மாலையில் யாரோ மனதோடு பேச... இளையராஜா இசையில் ஸ்வர்ணலதா பாடிய மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று. சின்னத்தம்பி வெளியான போது, போவோமா ஊர்கோலம்..., என மொத்த தமிழகமும் ஸ்வர்ணலதாவின் குரலைக் கேட்டு அதில் மயங்கிக் கிடந்தது.

    MORE
    GALLERIES

  • 1015

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    1994 இல் ரஹ்மான் இசையில் கருத்தம்மா படத்துக்கு பாடிய, போறாளே பொன்னுதாயி... பாடலுக்கு சிறந்த பாடகிக்காக தேசிய விருது ஸ்வர்ணலதாவுக்கு கிடைத்தது. மாநில அரசின் விருதையும் இப்பாடல் அவருக்குப் பெற்றுத் தந்தது.

    MORE
    GALLERIES

  • 1115

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    1987 இல் பாடகியாக அறிமுகமாகி 2010 இல் பாடுவதை நிறுத்திக் கொண்டார். சிகிச்சை எடுத்து வந்ததால் 2009 லேயே அவர் பாடுவதை தவிர்த்தார். 22 வருடங்கள் என்பது குறுகிய காலகட்டம். அதில் நமது நெஞ்சில் நீங்காத எத்தனையோ பாடல்களை பாடியிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 1215

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    1960 இல் வெளிவந்த மொகல் - லே - ஆசம் இந்திப் படம் இந்திய அளவில் சாதனைப் படைத்தது. இந்திய சினிமாவின் பென்ச் மார்க் திரைப்படங்களுள் ஒன்றாக அது உள்ளது.

    MORE
    GALLERIES

  • 1315

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயற்சி செய்த கமல், இந்தப் படத்தின் தூண்டுதலே அதற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிரதான காரணமாக இருந்தது நௌஸத் அலியின் இசையும் பாடல்களும். மொத்தம் 12 பாடல்கள். அதுவே ஏறக்குறைய 50 நிமிடங்கள் வரும். அதில் எட்டு பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடினார். ஒரு பாடலை அவரும் ஷம்ஜத் பேகமும் இணைந்து பாடினார்கள். ஒரு பாடல் முகமது ரஃபி, இரண்டு பாடல்கள் குலாம் நபி கான். அனைவருமே இசையின் பேரரசர்கள்.

    MORE
    GALLERIES

  • 1415

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    மொகல் - லே - ஆசம் திரைப்படத்தை அனார்கலி என்ற பெயரில் தமிழில்  மொழிமாற்றம் செய்த போது, லதா மங்கேஷ்கர் பாடிய அனைத்துப் பாடல்களையும் ஸ்வர்ணலதா பாடினார்.

    MORE
    GALLERIES

  • 1515

    ஸ்வர்ணலதாவின் சிறந்த தருணமாக அமைந்த இசையமைப்பாளரின் பாராட்டு

    அவரது குரலைக் கேட்டு மயங்கிப்போன நௌஸத் அலி, மிகப்பிரமாதமான குரல், பிரமாதமான பாடகி என பாராட்டியதை தனது வாழ்வின் 'தி பெஸ்ட் மொமண்ட்' என ஸ்வர்ணலதா பதிவு செய்துள்ளார். காலங்கள் கடந்தாலும் சில குரல்களை கரையாது. அதில் ஒன்று ஸ்வர்ணலதாவுடையது.

    MORE
    GALLERIES