தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் நான்காவது மகன் தான் மகேஷ் பாபு.தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் மகேஷ் பாபு. மகேஷ் பாபு சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார்.தனது கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியில் முடித்தார். படித்து முடித்த பின்பு படங்களில் நடிக்க தொடங்கினார். 2005 ஆம் ஆண்டு நம்ரத்தா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். மகேஷ் பாபு, நம்ரத்தா தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா தனது 10 வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். சித்தாரா தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்ப்பவர்களுக்கு சித்தாரா இவ்வளவு வளர்ந்துவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது. சித்தாராவின் இன்ஸ்டாகிராம் கணக்கை அவரின் அம்மா நம்ரத்தா மேனேஜ் செய்கிறார்.