தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். அவரது பீஸ்ட் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது தளபதி 66 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 1999-ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான மின்சார கண்ணா படத்தில் நடித்திருந்தார் விஜய். அதில் விஜய்யுடன் இணைந்து, குஷ்பு, ரம்பா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது ஒரு நேர்க்காணலில் விஜய் குறித்து பேசியுள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ”விஜய் மிகவும் வைராக்கியம் மிகுந்தவர், ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதை முடிக்காமல் விடமாட்டார். 2 முறை அவரை இயக்கும் சந்தர்ப்பம் கைநழுவியது. எதிர்காலத்தில் அவரை இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.