முகப்பு » புகைப்பட செய்தி » ''படத்துல நடிக்க வைக்கிறேன்னு சொன்னாரு... வாழ்க்கையை நரகமாக்கிட்டாரு...'': பிரபல நடிகை பரபரப்பு புகார்

''படத்துல நடிக்க வைக்கிறேன்னு சொன்னாரு... வாழ்க்கையை நரகமாக்கிட்டாரு...'': பிரபல நடிகை பரபரப்பு புகார்

பல படங்களைத் தயாரிக்க இருப்பதாகவும் அவற்றில் நான் நடிக்க வேண்டும் என்றும் கூறினார் - நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்

  • 15

    ''படத்துல நடிக்க வைக்கிறேன்னு சொன்னாரு... வாழ்க்கையை நரகமாக்கிட்டாரு...'': பிரபல நடிகை பரபரப்பு புகார்

    கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்து வந்திருக்கிறார். தொழிலதிபரை மிரட்டி ரூ. 200 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    MORE
    GALLERIES

  • 25

    ''படத்துல நடிக்க வைக்கிறேன்னு சொன்னாரு... வாழ்க்கையை நரகமாக்கிட்டாரு...'': பிரபல நடிகை பரபரப்பு புகார்

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு ரூ.10 கோடி அளவில் பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

    MORE
    GALLERIES

  • 35

    ''படத்துல நடிக்க வைக்கிறேன்னு சொன்னாரு... வாழ்க்கையை நரகமாக்கிட்டாரு...'': பிரபல நடிகை பரபரப்பு புகார்

    அப்போது சுகேஷுடன் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்பில் இருப்பதாகவும், மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தன்னிடம் கூறியதாகவும் ஜாக்குலின் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    MORE
    GALLERIES

  • 45

    ''படத்துல நடிக்க வைக்கிறேன்னு சொன்னாரு... வாழ்க்கையை நரகமாக்கிட்டாரு...'': பிரபல நடிகை பரபரப்பு புகார்

    மேலும் பல படங்களைத் தயாரிக்க இருப்பதாகவும் அவற்றில் நான் நடிக்க வேண்டும் என்றும் கூறினார். அவருடன் தினமும் மூன்று முறை போன் மற்றும் வீடியோ கால் மூலம் பேசிக்கொள்வோம். அவர் சிறையில் இருப்பதை என்னிடம் தெரிவிக்கவில்லை.

    MORE
    GALLERIES

  • 55

    ''படத்துல நடிக்க வைக்கிறேன்னு சொன்னாரு... வாழ்க்கையை நரகமாக்கிட்டாரு...'': பிரபல நடிகை பரபரப்பு புகார்

    என்னை அவர் முட்டாளாக்கிவிட்டார். அவரை நான் சென்னையில் இரண்டு முறை சந்தித்தேன். கடைசியாக கடந்த 2021 ஆகஸ்ட் 8 ஆம் தேதி அவருடன் பேசினேன் என்று தெரிவித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES