தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியானது. இதை அடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பணியாற்றும் வேகத்தைப் பார்த்து தாங்களும் உத்வேகத்துடன் பணியாற்றியதாகவும்அவர்கள் தெரிவித்தனர். காஷ்மீரில் இந்த காலநிலையில் பணியாற்றுவது கடினம் எனவும் இந்த சூழ்நிலையை தமிழ் கலைஞர்கள் அதனை மிக எளிதாக கையாண்டதாகவும் தெரிவித்தார்கள். 31 நாட்களாக மழை, பனிப்பொழிவு என எதையும் பொருட்படுத்தாது படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.