முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்கு ஒரே மெட்டில் பாடல் தந்த இளையராஜா

மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்கு ஒரே மெட்டில் பாடல் தந்த இளையராஜா

அர்ச்சனா கிளப்பில் அரைகுறை உடையில் நடனமாட, கிட்டியும், பிறரும் அதை பார்க்கும் காட்சிக்கு, 1980 இல் வெளியான ஜானி படத்தில் தான் போட்ட, ஆசையை காத்துல தூதுவிட்டு டியூனை அப்படியே பயன்படுத்தியிருப்பார் இளையராஜா.

  • News18
  • 111

    மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்கு ஒரே மெட்டில் பாடல் தந்த இளையராஜா

    1983 இல் பாலுமகேந்திரா வசந்தமே வருக என்ற படத்தை இயக்கினார். வழக்கம்போல் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் அனைத்தும் அவரே. சுமன், அர்ச்சனா, கிட்டி, பிரதீப் சக்தி, ரகுவரன், கௌதமி ஆகியோர் நடித்தனர். படம் வெளியாகி எந்தக் கவனமும் பெறாமல் காணாமல் போனது. பாலுமகேந்திரா வசந்தமே வருக என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது அவரது ரசிகர்களிலேயே பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

    MORE
    GALLERIES

  • 211

    மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்கு ஒரே மெட்டில் பாடல் தந்த இளையராஜா

    இந்தப் படத்தில் சில ஆச்சரியங்கள் உண்டு. நடிகையும், பாலுமகேந்திராவின் அன்புக்குரியவருமான நடிகை மௌனிகா 1985 இல் வெளியான பாலுமகேந்திராவின் உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் அறிமுகமானதாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 311

    மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்கு ஒரே மெட்டில் பாடல் தந்த இளையராஜா

    ஆனால், அவர் 1983 இல் வெளியான வசந்தமே வருக படத்தில் நடித்திருந்தார். படமே அவரிடமிருந்துதான் தொடங்கும். கல்லூரி மாணவியான மௌனிகாவை சிலர் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விடுவார்கள். அதுபோல் அதற்கு முன்பும் நடந்திருக்கும்.

    MORE
    GALLERIES

  • 411

    மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்கு ஒரே மெட்டில் பாடல் தந்த இளையராஜா

    இந்த பாலியல் பலாத்காரம் மற்றும்  கொலைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கும். பத்திரிகையாளரான சுமன் ஒருபக்கம் இது குறித்து விசாரிப்பார். அவரும் டான்சர் அர்ச்சனாவும் காதலிப்பார்கள்.

    MORE
    GALLERIES

  • 511

    மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்கு ஒரே மெட்டில் பாடல் தந்த இளையராஜா

    இதனிடையில் கிராமத்துக்கு படப்பிடிப்புக்கு செல்லும் இயக்குனர் ரகுவரன் அங்குள்ள அப்பாவிப் பெண் கௌதமின் அழகில் கவரப்படுவார். என்னுடைய சினிமாவில் நடிக்கிறியா? என்ற அவரது ஆசை வார்த்தையால் உந்தப்பட்டு, பட்டணத்துக்கு வண்டியேறுவார் கௌதமி. அங்கு யாரையும் தெரியாமல் அழுது கொண்டிருக்கும் கௌதமிக்கு அர்ச்சனா அடைக்கலம் தருவார்.

    MORE
    GALLERIES

  • 611

    மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்கு ஒரே மெட்டில் பாடல் தந்த இளையராஜா

    இந்நிலையில், அர்ச்சனாவும் மர்ம கும்பலால் கடத்தப்படுவார். இதற்கெல்லாம் பின்னால் இருப்பவர் மினிஸ்டர் கிட்டி. அவர் அர்ச்சனாவை பலாத்காரம் செய்ய, அதிர்ஷ்டவசமாக அவரிடமிருந்து அர்ச்சனா தப்பிப்பார். கிட்டியின் அடியாள்கள் அர்ச்சனா என நினைத்து, அவரது வீட்டில் இருக்கும் கௌதமியை எரித்துக் கொல்வார்கள்.

    MORE
    GALLERIES

  • 711

    மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்கு ஒரே மெட்டில் பாடல் தந்த இளையராஜா

    சுமன் அர்ச்சனாவை வெளியூர் அனுப்பி வைப்பார். அங்கு ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொண்டு, கிட்டியுடன் நெருக்கமாக பழகுவார். எப்படியும் அவரை அம்பலப்படுத்த வேண்டும்  என்பது திட்டம். ஆனால், அதற்குள் அவர் யார் என்பதை கிட்டி அறிந்து கொள்வார். வேஷம் மாறிய அர்ச்சனாவை தனது ஆள்களை வைத்து கடத்துவார். இறுதியில் சுமன் அவரை காப்பாற்றுவார்.

    MORE
    GALLERIES

  • 811

    மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்கு ஒரே மெட்டில் பாடல் தந்த இளையராஜா

    நேரடியான, எந்தத் திருப்பங்களும் இல்லாத த்ரில்லர் கதை. கௌதமிக்கு சின்ன வேடம். ரகுவரனுக்கு அதைவிட குறைவு. கௌதமியின் முரட்டு அப்பாவி அண்ணனாக பிரதீப் சக்தி நடித்திருந்தார். அந்த அப்பாவிதான் 1987 இல் வெளியான நாயகனில் ரவுடி இன்ஸ்பெக்டராக வில்லத்தனத்தில் கலக்கியிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 911

    மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்கு ஒரே மெட்டில் பாடல் தந்த இளையராஜா

    வேஷம் மாறிய அர்ச்சனா கிளப்பில் அரைகுறை உடையில் நடனமாட, கிட்டியும், பிறரும் அதை பார்க்கும் காட்சிக்கு, 1980 இல் வெளியான ஜானி படத்தில் தான் போட்ட, ஆசையை காத்துல தூதுவிட்டு டியூனை அப்படியே பயன்படுத்தியிருப்பார் இளையராஜா.

    MORE
    GALLERIES

  • 1011

    மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்கு ஒரே மெட்டில் பாடல் தந்த இளையராஜா

    ஜானி படப்பாடலை எஸ்.பி.சைலஜா பாடியிருப்பார். இதில் எஸ்.ஜானகி. அதில் வரிகள், ஆசையை காத்துல தூதுவிட்டு என்று இருந்தால் இதில், ராத்திரி உனக்கென ஆடட்டுமா என எழுதப்பட்டிருக்கும். வரிகளும், இசையும் வேறு. ஆனால், டியூன் அச்சு அசலாக அதேதான். ஒரே டியூனில் அமைந்த இந்த இரு பாடல்களில் முதலாவது, எவர்கிரீன் பாடலாக இன்றும் கேட்கப்படுகிறது. இரண்டாவது பாடல், யாராலும் கேட்கப்படாமல் கிட்டத்தட்ட மறக்கப்பட்டே விட்டது.

    MORE
    GALLERIES

  • 1111

    மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்கு ஒரே மெட்டில் பாடல் தந்த இளையராஜா

    வசந்தமே வருக படத்தில் தெலுங்கு நடிகை ஜெயலலிதர் சின்ன வேடம் ஒன்றில் நடித்திருந்தார். அவரது பெயர் டைட்டிலில் வரும். டிஸ்கோ சாந்தி ஒரேயொரு கவர்ச்சி நடனத்துக்கு ஆடியிருந்தார். அவர் பெயரும் டைட்டிலில் இடம்பெற்றது. ஆனால், மௌனிகாவின் பெயரை டைட்டிலில் தவிர்த்திருந்தனர்.  மலையாள த்ரில்லர் படங்கள் தந்த உத்வேகத்தில் பாலுமகேந்திரா இயக்கிய படம் இது. ஆனால், மலையாளப் படங்களின் தரத்தை வசந்தமே வருக எட்டவில்லை.

    MORE
    GALLERIES