நடிகை பார்வதி திருவோத்து இன்று தனது 34-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தவர். மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 2006-ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் பூ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், மரியான் திரைப்படத்தில் நடித்துள்ளார். பூ திரைப்படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப்பெற்றுள்ளார். அதோடு விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல், தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மற்றுமே கவனம் செலுத்தி வருகிறார். அதனால் குறைந்த படங்களில் நடித்தாலும், அனைத்தும் பெயர் சொல்லும் படங்களாக அமைந்துள்ளன. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் பார்வதிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.