நடிகை சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சமந்தாவுக்கு ஆந்திர மாநிலம் குண்டூரில் சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் கோவில் கட்டி வருகிறார். இவர் சமந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது திருப்பதி, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு பாதயாத்திரை சென்றார். இந்த நிலையில் நடிகை சமந்தாவிற்கு தன்னுடைய இல்லத்தில் கோவில் கட்டிவருகிறார். இந்த கோவிலை சமந்தாவின் பிறந்த நாளுக்கு திறக்க திட்டமிட்டுள்ளார்.