தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி மற்றும் மகன்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் எளிமையான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். மண்பானையில் பொங்கல் வைத்து, கோ பூஜை செய்து பொங்கல் விழாவை அவர்கள் கொண்டாடினர். நாற்காலியில் அமர்ந்த படி கண்ணாடியுடன் கைகூப்பியபடி பூஜையில் பங்கேற்றார்.