வித்தியாசமான உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் முன்னோடியாகத் திகழ்பவர் இயக்குநர் பாலா. சேதுவாக இருந்தாலும் சரி நந்தாவாக இருந்தாலும் சரி, தன் படங்களை நோக்கி அனைவரின் கவனத்தையும் திருப்பும் தனித்துவமான திறனை வெளிப்படுத்தினார். நம்மில் பலருக்கும் தெரிந்த வகையில், யதார்த்தத்தில் அவருடைய படங்கள் அமைந்ததில்லை. ஆனால் தான் எடுத்துக் கொண்ட வித்தியாச கதை களத்தை பார்வையாளர்களை ரசிக்க வைத்ததே, பாலாவின் வெற்றி.
சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா, தனது முதல் படத்தை நடிகர் விக்ரம் மற்றும் நடிகை அபிதாவை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து இயக்கினார். இது விக்ரமின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. தமிழின் சிறந்த படமாக தேசிய விருதை வென்ற இப்படம், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தப் படம் ஜெயமோகனின் ஏழாம் உலகம் என்ற தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது. 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் வசனங்களையும் அவரே எழுதியிருந்தார். இதில் ஆர்யா மற்றும் பூஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மீண்டும் ஒரு கடினமான படத்தை இயக்கிய பாலா, சிறந்த இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.