ஆண்ட்ரியா சிறந்த பின்னணி பாடகி மற்றும் நடிகையும் ஆவார். பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் ஆண்ட்ரியா சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வர தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு வெளியான ‘ அன்னையும் ரசூலும்’ என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். மேலும் ‘தடாகா’ என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். தொடர்ந்து உத்தம வில்லன், இது நல்ல ஆளு, தரமணி ஆகிய படங்களில் நடித்தார். 2018 ஆம் ஆண்டு வெளியான வடச்சென்னை படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது கடல் கன்னியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. சமீபத்தில் சுற்றுலா சென்ற ஆண்ட்ரியா அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். ஆண்ட்ரியாவுக்கு இன்ஸ்டாகிராமில் 2.6 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இந்நிலையில் ஆண்ட்ரியா பச்சை நிற புடவையில் பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.