சிம்புவின் பேச்சு பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்தது. நடிகர் சிம்பு என்றாலே நினைவுக்கு வருவது அவரது எனர்ஜி. எவ்வளவு பெரிய ஸ்டெப் என்றாலும் ஈஸியாக நடனமாடக் கூடியவர். எவ்வளவு பெரிய காட்சி என்றாலும் அசால்டாக கையாளக் கூடியவர் என அவரை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக அவரது தன்னம்பிக்கை. வெற்றியோ தோல்வியோ ரசிகர்கள் அவரைத் தொடர்ந்து ரசிகர்கள் ஆதரிப்பதற்கு இதுதான் காரணம்.
மாநாடு படத்தின் போது சிம்பு அளித்த பேட்டி ஒன்றில், ''செக்கச்சிவந்த வானம் படத்தில் ஓடும் காட்சியில் மிகவும் சிரமப்பட்டேன். அன்று இரவு என்னடா நம்மலாள ஓடக் கூட முடியல என அழுதேன். கட் பண்ணா மாநாடு படத்தில் ஏர் போர்ட் சீனில் நான் ஓடிவரும்போது இவங்களால என்ன பிடிக்க முடியல. அன்னைக்கு அவ்வளவு கஷ்டத்துலயும் ஒரு விஷயம்தான் தோணுச்சு. இல்லடா உன்னால வர முடியும் வந்துருவ நீ என பேசியிருந்தார்.
ஈஸ்வரன், மாநாடு, செக்கச் சிவந்த வானம், பத்து தல என தொடர்ச்சியாக படங்களில் நடித்துவருகிறார். தற்போதுவரை அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. சிம்பு மாதிரி பிரச்னைகளை சந்தித்த பல நடிகர்கள் சினிமாவில் காணாமலேயே போயிருக்கிறார்கள். ஆனால் சிம்பு ஒவ்வொரு முறையும் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு தனது கம்பேக் கொடுத்து பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்துவருகிறார். எல்லாம் மாறும் சரியாகும் என சிம்பு நம்பிக்கை வைத்து முயற்சித்தது தான் காரணம்.