நடிப்புக்கு சிறிது இடைவெளி விட்டு விட்டு குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன். அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் நம்ம ஸ்டைலிங் ஸ்டார் அல்லு அர்ஜுன். விடுமுறை முடிந்து திரும்பியதும் அவர் புஷ்பா 2 வேலைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, சந்தீப் ரெட்டி வாங்காவுடன் அல்லு அர்ஜுனின் புதிய படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. டி-சீரிஸ் பிலிம்ஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து அந்தப் படத்தை தயாரிக்கின்றனர். இதற்கிடையே அல்லு அர்ஜுன் வெளியிட்ட லேட்டஸ்ட் குடும்பப்படம் லைக்ஸை குவித்து வருகிறது.