நடிகை த்ரிஷா 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றார். அதன் பிறகு த்ரிஷாவிற்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ மௌனம் பேசியதே’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து சாமி, லேசா லேசா, ஆயுத எழுத்து ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய்யுடனுடன் நடித்துள்ளார். த்ரிஷா தற்போது ப்ரிந்தா என்ற தெலுங்கு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியன் செல்வன்’ படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடும் த்ரிஷாவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். கூலிங் கிளாஸ் போட்டு கெத்தாக போஸ் கொடுக்கும் நடிகை த்ரிஷா. தலையில் மல்லிகைப்பூ வைத்து பாரம்பரிய புடவையில் அழகாக இருக்கிறார் த்ரிஷா. சிம்பிளான புடவைக்கு அணிகலன்களே அவசியம். எனவே இதில் டெப்பிள் கலெக்ஷன் அணிகலன்களை அணிந்து சிலை போல் நிற்கிறார்.