முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஆபாச வெப்சைட்டில் வீடியோவா? நடிகைக்கு எதிராக புகார்.. போலீசார் தீவிர விசாரணை!

ஆபாச வெப்சைட்டில் வீடியோவா? நடிகைக்கு எதிராக புகார்.. போலீசார் தீவிர விசாரணை!

தனது புகைப்படங்களை தவறாக சித்தரித்து பல்வேறு ஆபாச இணையதளங்களில் பதிவிட்டுள்ளதாக ஐடி ஊழியர் மீது நடிகை லூப்னா அமீர் புகாரளித்தார்.

  • 16

    ஆபாச வெப்சைட்டில் வீடியோவா? நடிகைக்கு எதிராக புகார்.. போலீசார் தீவிர விசாரணை!

    கேக் றான் மேக்ரான் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லூப்னா அமீர்.
    யைச் சேர்ந்த இவர் பல்வேறு வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். திருமண செயலி மூலம் நடிகை லூப்னா அமீர், வரன் பார்த்து வந்துள்ளார். அதில் வியாசர்பாடியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும் ஐடி ஊழியருமான மசியுள்ளாகானின் அறிமுகம் நடிகை லூப்னா அமீருக்கு கிடைத்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    ஆபாச வெப்சைட்டில் வீடியோவா? நடிகைக்கு எதிராக புகார்.. போலீசார் தீவிர விசாரணை!

    ஒருவரை ஒருவருக்கு பிடித்துப்போக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நட்பாக பழகி வந்துள்ளனர்.
    நெருக்கம் உண்டாவதற்குள் மசியுல்லாகானிற்கு ஏற்கனவே திருமணமான தகவல் நடிகை லூப்னாவிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவரை விட்டு விலகியதாகத் தெரிகிறது.ஆனால் நெருக்கமாக தன்னோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து மசியுள்ளாகான், நடிகை லூப்னாவிற்கு டார்ச்சர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    ஆபாச வெப்சைட்டில் வீடியோவா? நடிகைக்கு எதிராக புகார்.. போலீசார் தீவிர விசாரணை!

    இதனால் திருவல்லிக்கேணி மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரலில் மசியுள்ளாகான் மீது லூப்னா புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் மசியுல்லாகானை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 46

    ஆபாச வெப்சைட்டில் வீடியோவா? நடிகைக்கு எதிராக புகார்.. போலீசார் தீவிர விசாரணை!

    தற்போது ஜாமின் வெளியே வந்துள்ள மசியுல்லாகான் புகாரை வாபஸ் பெற சொல்லி, தனது மனைவியுடன் சேர்ந்து நடிகை லூப்னாவிற்கு மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் மசியுல்லாகான் மற்றும் அவரது மனைவி இருவர் மீதும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை லூப்னா புகார் அளித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 56

    ஆபாச வெப்சைட்டில் வீடியோவா? நடிகைக்கு எதிராக புகார்.. போலீசார் தீவிர விசாரணை!


    மசியுல்லாகான் தரப்பில் விசாரித்த போது, இந்தியாவால் தடை செய்யப்பட்ட செயலி மூலம் ஆபாச வீடியோ பதிவிட்டு சம்பாதிக்கும் வேலையை செய்வதாகத் தெரிய வந்ததை அடுத்து நடிகை லூப்னாவுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 66

    ஆபாச வெப்சைட்டில் வீடியோவா? நடிகைக்கு எதிராக புகார்.. போலீசார் தீவிர விசாரணை!

    நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து திருமணம் செய்து கொள்ள மிரட்டுவதாக நடிகை லூப்னா மீது மசியுல்லாகான் பெரவள்ளூர் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். திருமண செயலி மூலம் பழக்கமான நடிகை மற்றும் ஐடி ஊழியர் மாறி மாறி புகார் அளிக்கப்பட்ட வழக்கு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.இருவரில் யார் யாரை ஏமாற்றினார்கள் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

    MORE
    GALLERIES