லப் ப்ரேக் அப் ஆனது நல்ல சம்பவம் என பிரபல நடிகை இலியானா கூறியுள்ளார். தென்னிந்தியா மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தார். இலியானாவுக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஃபோட்டோ கிராஃபர் ஆன்ட்ரூ நிபோனுக்கும் காதல் ஏற்பட்டது. தற்போது இருவருக்கும் இடையே லவ்வில் ப்ரேக் அப் ஏற்பட்டு விட்டது. ப்ரேக் அப்பால் மன வருத்தத்தில் இருந்த இலியானா மன நல நிபுணரை அணுகியுள்ளார். அவர் ‘உன்னிடம் உள்ள சிறப்பு அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்து’ என்று இலியானாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதையடுத்து தனது மதிப்பை உணர்ந்த குடும்பத்தினர், உறவினர்களுடன் அதிக நேரத்தை இலியானா கழித்துள்ளார். ப்ரேக் அப் குறித்து பேட்டி அளித்துள்ள இலியானா, ப்ரேக் அப் வேதனை அல்ல வரம் என்று கூறியுள்ளார். ப்ரேக் அப் என்பது தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். கடைசியாக ப்ரேக் அப் என்பது தனது வாழ்வில் நடந்த நல்ல சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார் இலியானா.