முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » கீழடி அருங்காட்சியகம்... குழந்தைகளுடன் நடிகர் சூர்யா, ஜோதிகா விசிட்...!

கீழடி அருங்காட்சியகம்... குழந்தைகளுடன் நடிகர் சூர்யா, ஜோதிகா விசிட்...!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா குடும்பத்தினருடன் பார்வையிட்டார்.

  • 15

    கீழடி அருங்காட்சியகம்... குழந்தைகளுடன் நடிகர் சூர்யா, ஜோதிகா விசிட்...!

    தமிழரின் பெருமையை பறைசாற்றும் வகையில், மாவட்டத்தில் கீழடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு சுமார் பல கோடி மதிப்பில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    MORE
    GALLERIES

  • 25

    கீழடி அருங்காட்சியகம்... குழந்தைகளுடன் நடிகர் சூர்யா, ஜோதிகா விசிட்...!

    அதனைத் தொடர்ந்து, கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட மக்கள் நாள்தோறும் சென்ற வண்ணம் இருக்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வளர்ச்சி, கல்வி, வாழ்க்கை முறை போன்றவற்றைத் தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வத்துடன் கீழடி அருங்காட்சியகம் செல்கின்றனர். 

    MORE
    GALLERIES

  • 35

    கீழடி அருங்காட்சியகம்... குழந்தைகளுடன் நடிகர் சூர்யா, ஜோதிகா விசிட்...!

    தற்போது, நடிகர் சூர்யா அவரின் குடும்பத்தினருடன் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுள்ளார். நடிகர் சூர்யாவுடன் அவரின் மனைவியும் நடிகையும் ஆன ஜோதிகா, தந்தை சிவகுமார் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் ஆகியோர் இணைந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அகழாய்வு பொருட்களை இன்று பார்வையிட்டனர். மேலும் அருங்காட்சியக ஊழியர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 45

    கீழடி அருங்காட்சியகம்... குழந்தைகளுடன் நடிகர் சூர்யா, ஜோதிகா விசிட்...!

    கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வுகள் நடந்தன. இந்த அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள் பொறிந்த பானை ஓடுகள், கல் மணிகள், ஆட்டக்காய்கள், வெள்ளி முத்திரைக் காசுகள், கங்கை நாகரிகத்துடன் தொடர்புடைய கறுப்பு வழுவழுப்பு பானைகள் உள்ளிட்டவை கிடைத்தன. இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட அகழாய்வில், உருண்டையான பானைகள், உருக்கு உலைகள், சுடுமண் முத்திரைகள், கண்ணாடி, சங்கு மணிகள் உள்ளிட்டவையும் கிடைத்தன.

    MORE
    GALLERIES

  • 55

    கீழடி அருங்காட்சியகம்... குழந்தைகளுடன் நடிகர் சூர்யா, ஜோதிகா விசிட்...!

    மேலும் கொந்தகையில், 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு. 6ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை எனத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES