நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைபெற்று வந்தார்.
2/ 8
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3/ 8
கடந்த 1951ல் ஆந்திராவில் பிறந்தவர் சரத்பாபு. தந்தையின் ஹோட்டல் தொழிலைத் தொடர விரும்பாத அவர், கல்லூரி காலத்தில் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருந்திருக்கிறார்.
4/ 8
ஆனால் கிட்டப்பார்வை பிரச்னையால் அவரது ஆசை நிறைவேறாமல் போயிருக்கிறது.
5/ 8
இதனையடுத்தே அவருக்கு நடிகராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது.
6/ 8
1973ஆம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான சரத்பாபு, தமிழ், மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
7/ 8
பிரபல இயக்குநர் மகேந்திரனுக்கு பிடித்தமான நடிகராக சரத்பாபு இருந்திருக்கிறார்.
8/ 8
மகேந்திரன் இயக்கத்தில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி, அழகிய கண்ணே போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
18
கிட்டப்பார்வை பிரச்னை - மறைந்த நடிகர் சரத்பாபுவின் நிறைவேறாத ஆசை
நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைபெற்று வந்தார்.
கிட்டப்பார்வை பிரச்னை - மறைந்த நடிகர் சரத்பாபுவின் நிறைவேறாத ஆசை
கடந்த 1951ல் ஆந்திராவில் பிறந்தவர் சரத்பாபு. தந்தையின் ஹோட்டல் தொழிலைத் தொடர விரும்பாத அவர், கல்லூரி காலத்தில் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருந்திருக்கிறார்.
கிட்டப்பார்வை பிரச்னை - மறைந்த நடிகர் சரத்பாபுவின் நிறைவேறாத ஆசை
1973ஆம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான சரத்பாபு, தமிழ், மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.