23 வயது சீரியல் நடிகையின் அம்மாவுக்கு தற்போது குழந்தை பிறந்திருப்பது மலையாள சின்னத்திரை வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது மலையாள சீரியல் நடிகையாக வலம் வருபவர் ஆர்யா பார்வதி. சில நாட்கள் முன்பு தனது 47 வயது தாய் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டகிராமில் அறிவித்தார். தற்போது தனக்கு தங்கை பிறந்திருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளார். ஆர்யா பார்வதி தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை வெளிநாட்டில் முடித்தார். 23வயது சீரியல் நடிகைக்கு தங்கச்சி பாப்பா என்பது இது கடந்த வருடம் வெளியான வீட்ல விசேஷம் படத்தை ஞாபகப்படுத்துவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தங்கள் குழந்தைகள் டீன் - ஏஜ் வயதை எட்டிய பிறகு அடுத்த குழந்தை பெறுவதை இந்திய பெற்றோர் தவிர்கின்றனர். ஆனால் மேலை நாடுகளில் அப்படியல்ல. 50 வயதில் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வது கூட அங்கே சகஜம்.