முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » ஒரே நிறுவனத்தில் 480 நாட்கள் மேல் பணிபுரிபவரா?.... உங்களுக்கான சலுகைகள் என்னென்ன தெரியுமா?

ஒரே நிறுவனத்தில் 480 நாட்கள் மேல் பணிபுரிபவரா?.... உங்களுக்கான சலுகைகள் என்னென்ன தெரியுமா?

Job Security: தொழிலாளருக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. நிரந்தர அந்தஸ்து பெற்றால், பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் சமூகப் பாதுகாப்பை பெறலாம்

  • 17

    ஒரே நிறுவனத்தில் 480 நாட்கள் மேல் பணிபுரிபவரா?.... உங்களுக்கான சலுகைகள் என்னென்ன தெரியுமா?

    நம்மில் பெரும்பாலானோர் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், தனியார் நிறுவனங்களில் பணி செய்து வருகிறோம். உதாரணமாக, 2011-12 தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் படி (National Sample Survey), நாட்டின் மொத்த பணியாளர்களால் கிட்டத்தட்ட 83% பேர் முறைப்படுத்தப்படாத பணியாளர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிக்கப்பட கூடியவராகவும், எந்தவித வேலை உத்தரவாத பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பும் இல்லாதவர்களாகவும் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 27

    ஒரே நிறுவனத்தில் 480 நாட்கள் மேல் பணிபுரிபவரா?.... உங்களுக்கான சலுகைகள் என்னென்ன தெரியுமா?

    இத்தைகய தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, தொழில் நிறுவனங்கள் (பணியாளர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கல்) சட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த 1981ம் ஆண்டில் நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் கீழ், பணியாளர்கள் இரண்டு வருடங்களில், தொடர்ந்து 480 நாட்கள் பணி செய்தால் நிரந்தர பணி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 37

    ஒரே நிறுவனத்தில் 480 நாட்கள் மேல் பணிபுரிபவரா?.... உங்களுக்கான சலுகைகள் என்னென்ன தெரியுமா?

    Employment Benefits:  தொழிலாளருக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. நிரந்தர அந்தஸ்து பெற்றால், பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் சமூகப் பாதுகாப்பை பெறலாம். மகப்பேறு விடுமுறை, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி, சம்பளத்துடன் கூடிய விடுப்பு, வேலை இழப்பீடு, பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் பெற முடியும். தொழிலாளர்கள் நீங்கள் தனியார் நிறுவனங்களில் பணி செய்து வந்தால் சமூகப் பாதுகாப்பு அளிக்கும் முக்கியமான சட்டமாக, பணிக்கொடை வழங்கல் சட்டம், 1972 உள்ளது

    MORE
    GALLERIES

  • 47

    ஒரே நிறுவனத்தில் 480 நாட்கள் மேல் பணிபுரிபவரா?.... உங்களுக்கான சலுகைகள் என்னென்ன தெரியுமா?

    இந்த சட்டம் உலகளவில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தரத் தகுதியினை பெற்றுள்ளனர் இந்த சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு மேலும் அதிகமாகும் பட்சத்தில், பாதுகாப்பற்ற நிலைமையில் இருக்கும் தொழிலாளர்கள் அதிலிருந்து மீண்டு வர உதவும்.

    MORE
    GALLERIES

  • 57

    ஒரே நிறுவனத்தில் 480 நாட்கள் மேல் பணிபுரிபவரா?.... உங்களுக்கான சலுகைகள் என்னென்ன தெரியுமா?

    Permanent Full-Time Employment: கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள், பீடி தொழிற்சாலைகள், போக்குவரத்து நிறுவனங்கள் போன்ற தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தும்.

    MORE
    GALLERIES

  • 67

    ஒரே நிறுவனத்தில் 480 நாட்கள் மேல் பணிபுரிபவரா?.... உங்களுக்கான சலுகைகள் என்னென்ன தெரியுமா?

    முந்தைய, 12 மாதங்களில் நாள் எதிலும் 20 அல்லது 20க்கு குறைவான தொழிலாளர்களை பணியமர்த்திய/ பணியமர்த்தப்பட்டிருக்கும் நிறுவனதிற்கு இந்த சட்டம் பொருந்தாது. புதிதாக தொடங்கப்பட்ட தொழில் நிறுவனத்தின் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இச்சட்டம் பொருந்தாது.

    MORE
    GALLERIES

  • 77

    ஒரே நிறுவனத்தில் 480 நாட்கள் மேல் பணிபுரிபவரா?.... உங்களுக்கான சலுகைகள் என்னென்ன தெரியுமா?

    கடந்த 10 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், விவரங்களுக்கு மாவட்ட தொழிலாளர் துணை ஆய்வளாரை தொடர்பு கொள்ளலாம். http://www.labour.tn.gov.in/grievances.php என்ற இணையத்தில் நேரடியாக உங்கள் புகார் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

    MORE
    GALLERIES