டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கையை 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிண்டங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டுளளது. இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆக அதிகரிக்கப்பட்டுளளது. தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist) பணியிடங்கள் எண்ணிக்கை 1,024 இருந்து 1176 ஆக அதிகரிக்கப்பட்டுளளது. காலியிடங்கள் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இம்மாத இறுதிக்குள், குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் விளக்கம் அளித்திருந்தது.