அஞ்சல்துறை துறை சாராத சேவை அமைப்பின் (Extra Departmental system in the Department of Posts) கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை, படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான சம்பள விகிதம் இவர்களுக்கு பொருந்தாது. (Gramin Dak Sevaks are holders of civil posts but they are outside the regular civil service)
ப்ரோமோஷன் உண்டா? ஆம்! குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட இந்த கிராம அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் இந்திய அஞ்சல் துறையில் உள்ள நிர்வாகப் பிரிவின் கீழ் (Post of Administrative Offices (Circle Office and Regional Office) வரும் குரூப் 'சி' பணிக்கு (பல்நோக்கு பணியாளர் - Multi Tasking Staff) தகுதி பெறலாம். அதேபோன்று, 5 ஆண்டு பணி முன் அனுபவம் உடைய, கிராம அஞ்சல் உதவியாளர்கள் எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல், இந்திய அஞ்சல் துறை சார்நிலைப் பணிகளில் (Posts of Subordinate Office) அடங்கிய குரூப் சி (பல்நோக்கு பணியாளர் - Multi Tasking Staff) நிலைக்கு தகுதியுடைவராவார். குறைந்தது 3 ஆண்டு பணி முன்அனுபவம் உள்ள அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் கூட இந்த பதவியை அடையலாம். அதன்பின், போஸ்ட்மேன், மெயில்கார்டு உள்ளிட்ட பதவிகளுக்கு உயர்வு பெற வாய்ப்புண்டு.
விண்ணப்பம் செய்வது எப்படி? இப்பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முகப்புப் பக்கத்தில், Registration- ஐ கிளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண், இதர தொடர்பான விவரங்கள் மற்றும் தகவல்களை அளிக்க வேண்டும். இறுதியாக, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும்.
பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும், விவரங்களுக்கு கிளிக் செய்யவும்.