அந்த வகையில், வெல்டர், பெயிண்டர், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை தென் கிழக்கு ரயில்வே வாரியம் (South Eastern Railway) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் , 2026 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி 02-02-2023 ஆகும்.
அதே போன்று, ஏசி மெக்கானிக், கார்பன்டர், எலக்ட்ரிசியன், பிட்டர், பெயிண்டர், வெல்டர் பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை தெற்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 4103 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தெற்கு மத்திய ரயில்வே மணடலத்தின் கீழ் வரும், வேலூர் மாவட்ட விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி 29.01.2023 ஆகும்.
ஜெய்ப்பூரை தலைமையாகக் கொண்டு இயங்கி வரும், வடமேற்கு ரயில்வே மண்டலம், மெக்கானிக்கல், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் தொழிற் பழகுநருக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்மூலம், 2026 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி 10.02.2023 ஆகும்.