12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் அடுத்து என்ன படிக்கலாம் என ஆய்வு செய்து வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் பலரின் கவனம் இன்ஜினியரிங் மீது உள்ளது. ஏனென்றால், இன்ஜினியரிங் படித்தால் எந்த துறையில் வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற நிலை அதிகரித்துள்ளது. எனவே தான் மாணவர்களும் சரி.. பெற்றோர்களும் சரி… பெரும்பாலும் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்கின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடும் போது பொறியியல் துறையில் இந்தியா தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. NIRF தரவரிசை பட்டியல் 2022-யின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின் என்பது நாட்டில் நடத்தப்படும் மிகப்பெரிய தேர்வுகளில் ஒன்றாகும். 2023 ஆம் ஆண்டிற்கான JEE முதன்மைத் தேர்வு இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டன. ஜேஇஇ மெயின் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர அனுமதி பெறுவார்கள். அந்த வகையில், NIRF தரவரிசை 2022 இன் படி சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை இங்கே காணலாம்.
என்ஐஆர்எஃப் (NIRF) தரவரிசையில் இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras) முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இது சென்னையில் உள்ள பொது தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ளது. இந்தியாவின் 8 பொது நிறுவனங்களில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸின் 4 ஆண்டு B.Tech programme படிப்பு இங்கு வழங்கப்படும் படிப்புகளில் ஒன்றாகும். B.Tech படிப்புக்கு மொத்தம் 951 இடங்கள் உள்ளன. UG-க்கான சேர்க்கை JEE அட்வான்ஸ் தேர்வு அடிப்படையில் வழங்கப்படுகிறது. கேட் தேர்வின் அடிப்படையில் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.
என்ஐஆர்எஃப் தரவரிசையில் IIT டெல்லி, 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு B.Tech சேர்க்கை JEE MAIN > JEE ADVANCED > COUNSELLING மூலம் நடைபெறுகிறது. கவுன்சிலிங் ஆன்லைன் முறையில் நடைபெறும். JEE-யில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஸ்கிரீனிங் செயல்முறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கே பிடெக் சேர்க்கை நுழைவுத் தேர்வின் அடிப்படையில் வழங்கப்படும். இங்கே சேர்க்கைக்கு JEE மெயின் தேர்வுக்கு பிறகு JEE அட்வான்ஸ் தேர்வின் மதிப்பெண்கள் அவசியம். B.Tech படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் JEE மெயின் தேர்வு அடிப்படையில் IIT கான்பூரில் சேர்க்கை பெற முடியாது. JEE அட்வான்ஸ் தேர்வுக்கு பிறகும், JoSAA கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கையை பெறுவார்கள்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி காரக்பூர் தேசிய தரவரிசை பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஐஐடி காரக்பூரில் பி.டெக் படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12வது வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம்/ உயிரியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சேர்க்கைக்கு பதிவு செய்ய 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50-60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முதலில், விண்ணப்பதாரர்கள் JEE மெயின், பின்னர் JEE அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
NIRF தரவரிசையில், இந்திய தொழில்நுட்பக் கழகம் கவுகாத்தி 7வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில், ஜேஇஇ மெயின்/ஜேஇஇ அட்வான்ஸ்டு மதிப்பெண்ணுக்கு பிறகு கவுன்சிலிங் அடிப்படையில் பி.டெக் படிப்பில் சேர்க்கை வழங்கப்படும். இது தவிர, 12ம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் / உயிரியல் படித்திருக்க வேண்டும். (ஐஐடி கவுகாத்தியில் பல இலவச மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் நடத்தப்படுகின்றன.)
திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி NIRF தரவரிசையில் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் என்ஐடி திருச்சி என்றும் அழைக்கப்படுகிறது. JEE Main, GATE, IIT JAM, CAT மற்றும் NIMCET ஆகியவற்றின் அடிப்படையில் இங்கு சேர்க்கை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கட் ஆஃப் முடிவு செய்யப்பட்ட அதே ரேங்க் இருக்கும்.
NIRF தரவரிசையில் கர்நாடகா, சூரத்கல் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 10வது இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு JEE மெயின் மதிப்பெண் மற்றும் JoSAA கவுன்சிலிங் அடிப்படையில் BTech சேர்க்கைகள் வழங்கப்படுகின்றன. JoSAA கவுன்சிலிங்கிற்குப் பிறகும் இடங்கள் காலியாக இருந்தால், அவை CSAB கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.