முகப்பு » புகைப்பட செய்தி » கல்வி » பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய அப்டேட்...!

பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய அப்டேட்...!

Opening of schools | வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டுமென ராமதாஸ், சீமான் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

  • 15

    பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் இறுதியில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்தன. இதனையடுத்து, தற்போது கோடை விடுமுறையில் மாணவர்கள் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 25

    பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய அப்டேட்...!

    ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், எந்த வருடமும் இல்லாத அளவுக்கு தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய அப்டேட்...!

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கோடை வெயின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு விடுமுறையை நீட்டித்து, பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    MORE
    GALLERIES

  • 45

    பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய அப்டேட்...!

    ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாஸ், “கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று தனது ட்விட்டரில் வலியுறுத்தி இருந்தார்.

    MORE
    GALLERIES

  • 55

    பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய அப்டேட்...!

    இதனிடையே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 வகுப்பு வரையிலும்,அதேபோன்று ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் 5ம் தேதி பள்ளிகள் திட்டமிட்டவாறே திறக்கப்படும். பள்ளித் திறப்பில் மாற்றம் இருந்தால் முதல்வர் அதனை அறிவிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES