Kodaikanal News : கொடைக்கானல் மலை கிராமத்தில் நடைபெற்ற வினோத சேத்தாண்டி திருவிழாவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் வயது வேறுபாடு இன்றி கலந்து கொண்டனர்
செய்தியாளர் : ஜாபர்சாதிக் - கொடைக்கானல்
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கீழ்மலை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் மற்றும் உட்கடை கிராமங்களும் உள்ளது.
2/ 11
இந்த பகுதியில் வசிக்கும் மலைக்கிராம மக்கள் விவசாயம் செய்வதையே தங்களது பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
3/ 11
கீழ்மலை கிராம பகுதியில் உள்ள முக்கிய விவசாய கிராமம் தாண்டிக்குடி ஆகும். இங்குள்ள பட்டாளம்மன் முத்தாலம்மன் கோயில் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும்.
4/ 11
இந்த திருவிழாவில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு முதல் நாளான இன்று கரியாமல் சுவாமிக்கு சேத்தாண்டி வேடம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
5/ 11
இந்நிகழ்ச்சியில் தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, பட்லாங்காடு, கொடலங்காடு, பண்ணைக்காடு, அரசன் கோடை, காமனூர் உள்ளிட்ட மலைகிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் வயது வித்தியாசமின்றி கலந்து கொண்டனர்.
6/ 11
இந்த கிராம திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் ஒன்று திரண்டு ஒருவர் மீது ஒருவர் சேற்றினை அடித்தும் சேத்தாண்டி வேடம் பூண்டும், ஊருக்குள் ஊர்வலமாக வந்து முத்தாலம்மனை வேண்டுகின்றனர்.
7/ 11
சேற்றை அடித்து வேண்டுவதால் தங்களுக்கு நோய் நொடிகள் வருவதில்லை என கிராம மக்களால் கூறப்படுகிறது.
8/ 11
சுமார் 200 வருடங்களாக தொடரும் இந்த வினோத திருவிழாவில் ஏராளமாக பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை அடித்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
9/ 11
மேலும், ஊருக்குள் விவசாயம் செழிக்கவும், அனைத்து தரப்பு மக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
10/ 11
சேற்றுடன் ஊருக்குள் வந்து பலவகையான கலர் பொடிகளை தூவி கொண்டாடி மகிழ்கின்றனர்.
11/ 11
இரண்டு வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் இந்த வினோத திருவிழாவில் பல ஊர்களில் இருந்தும் வருகை புரிந்த பக்தர்களும் திரளாக கலந்துகொண்டனர்.