மக்கள் நோய் நொடிகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக இக்கம்பத்திற்கு மஞ்சளும், உப்பும் போடுகின்றனர். ஆடி மாத வெள்ளி, செவ்வாய், ஞாயிறு பூஜைகளும், மாசி மாத விழாவும் இங்கு வெகு பிரசித்தம். மண்டகப்படி விழா, பூக்குழி விழா, தசாவதார விழா, ஊஞ்சல் உற்சவம், தெப்போற்சவம் போன்ற வைபவங்கள் மாசித்திருவிழாவின் போதும் இங்கு நடைபெறும்.
தெப்ப திருவிழாவின்போது மாரியம்மன் சயனகோலத்தில் காட்சியளிப்பது இந்தக் கோயிலில் மட்டும்தான் என்பதும் சிறப்பு.
முளைப்பாரி, அங்கப்பிரதட்சணம், தொட்டில் கட்டுவது, உப்பு - மிளகுக் கொட்டுவது, மலர் பந்து சாத்துதல், தீச்சட்டி ஏந்துவது, பூக்குழி இறங்குவது, கரும்புத் தொட்டில் சுமப்பது, மாவிளக்கு ஏற்றுதல் என இங்கு ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் நேர்த்திக் கடன்கள் அநேகம்.
குறிப்பாக அம்மை நோய் தாக்கியவர்பகளுக்கு இந்த கோவிலின் தீர்த்தம் தான் அருமருந்து. சமய பேதமில்லாமல் இந்ததீர்த்தத்தை மக்கள் அருந்துவதே அதற்கு சான்று. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 9, 10, 11 ஆகிய நாட்களிலும் அக்டோபர் மாதம் 2, 3, 4 ஆகிய நாட்களிலும் காலை 6.20 மணி முதல் 6.40 மணி வரை சூரியனின் செங்கதிர்கள் மாரியம்மனின் திருமுடிமீது பட்டு கீழிறங்கி திருமுகத்தில் பணிவது சிலிர்க்க வைக்கும் திருக்காட்சிபுரிவார்.
இதனை கிறிஸ்தவர், இஸ்லாமியர், இந்துக்கள் என 3 மத மக்களும் மகிழ்ந்து கொண்டாடுவர். இந்த கோவிலின் ஆண்டு மாசித்திருவிழா பூச்சொரிதலுடன் நாளை(17.02.2023) வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 7.3.2023 செவ்வாய்க் கிழமை தெப்ப உற்சவத்துடன் முடிவடைய உள்ளது. மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.