முகப்பு » புகைப்பட செய்தி » தர்மபுரி » ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து.. படையல் ஆன 500 ஆடுகள்.. அரூரில் சுவாரஸ்ய திருவிழா!

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து.. படையல் ஆன 500 ஆடுகள்.. அரூரில் சுவாரஸ்ய திருவிழா!

Dharmapuri festival | ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த திருவிழாவில் சுமார் 500 ஆடுகள் அம்மனுக்கு பலியிடப்பட்டது.

  • 16

    ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து.. படையல் ஆன 500 ஆடுகள்.. அரூரில் சுவாரஸ்ய திருவிழா!

    தருமபுரி மாவட்டம் அரூரில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள், ஆண்டுதோறும் தை மாதத்தில் தங்களது தொழில், வியாபாரம் நலமுடன் இருக்க தேவாதியம்மனுக்கு கிடா வெட்டி படையலிட்டு வழிபடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டும் தேவாதியம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 26

    ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து.. படையல் ஆன 500 ஆடுகள்.. அரூரில் சுவாரஸ்ய திருவிழா!

    தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது தேவாதியம்மன் கோயில். இந்த கோயிலில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மட்டும் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். 3 தலைமுறையாக இந்த திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து.. படையல் ஆன 500 ஆடுகள்.. அரூரில் சுவாரஸ்ய திருவிழா!

    வழக்கம் போல் இந்தாண்டும் தேவாதியம்மன் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த திருவிழாவில் சுமார் 500 ஆடுகள் அம்மனுக்கு பலியிடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 46

    ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து.. படையல் ஆன 500 ஆடுகள்.. அரூரில் சுவாரஸ்ய திருவிழா!

    தொடர்ந்து வண்ண அலங்காரத்தில் ஜொலித்த அம்மன் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வெட்டப்பட்ட ஆடு இறைச்சிகள் தீயில் சுடப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 56

    ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து.. படையல் ஆன 500 ஆடுகள்.. அரூரில் சுவாரஸ்ய திருவிழா!

    சுமார் 2,000 குடும்பங்களுக்கு ஆடு இறைச்சிகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த இறைச்சியை இவர்கள் மட்டுமே சாப்பிடுவதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து.. படையல் ஆன 500 ஆடுகள்.. அரூரில் சுவாரஸ்ய திருவிழா!

    வெட்டப்பட்ட இறைச்சிகள் கறி விருந்தாக்கப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள் கறி விருந்தில் பங்கேற்று சாப்பிட்டனர். இந்த இறைச்சிகள் வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாது என்பதால், மீதமுள்ள இறைச்சிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

    MORE
    GALLERIES