உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.72 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,23 ஆயிரம் பேருக்கு தொற்று அறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,60,00 உள்ளது. 42,000 பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41,37,000 உள்ளது. ரஷ்யாவில் 10,25,000 பேருக்கும், பெருவில் 6,89,000 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை 8,87,000 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தொடவிருக்கிறது.