ஒரே நாளில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில், உலக அளவில் இந்தியா 4வது இடத்தை எட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து ரஷ்யாவில் 11 ஆயிரம் தொற்றுகளும், பிரேசிலில் 6ஆயிரத்து 368 தொற்றுகளும் ஒரே நாளில் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரேநாளில் 4 ஆயிரத்து 213 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரிட்டன் ஒரு நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 5வது இடத்திற்கு சென்றுள்ளது.