கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ஏழை நாடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்ல வேண்டிய தடுப்பு மருந்துகள், சில பணக்கார நாடுகளில் உள்ள ஆரோக்கியமான இளைஞர்களுக்கு செலுத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார்.