அதாவது முதலில் பிளாஸ்மா தானம் என்பது கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உடலில் புரோட்டீன் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி இரத்த செல்களில் அதிகரித்திருக்கும். எனவே வைரஸை தாக்கும் ஆண்டிபாடீஸ் பிளாஸ்மா செல்களில் இருக்கும் என்பதால் அவற்றை எடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகும். இதனால் அவர்கள் விரைவில் வைரஸ் தாக்குதலிலிருந்து மீண்டு எழுவார்கள்.
யாரெல்லாம் தரவியலாது : அதாவது 50 கிலோ எடைக்குக் குறைவானவர்கள், குழந்தை பெற்றுக்கொண்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவானவர்கள், மற்ற ஏதேனும் நோய் அல்லது உடல் பிரச்னைகள், எ.கா சர்க்கரை நோய், இதய பாதிப்பு, ஹெச் ஐ.வி பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, ஹெபடைடிஸ் பாதிப்பு என்பன போன்ற பிரச்னைகள் இருப்போர் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது.