முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » காரைக்குடியில் ஊரடங்கு காலத்தில் தேவையறிந்து தேநீர் தாகம் தீர்க்கும் தன்னார்வலர்!

காரைக்குடியில் ஊரடங்கு காலத்தில் தேவையறிந்து தேநீர் தாகம் தீர்க்கும் தன்னார்வலர்!

காரைக்குடி வ.உ.சி.ரோடு சோமுபிள்ளை தெருவை சேர்ந்த 60 வயதுடைய பஸ் ஸ்டாண்ட் பாலு என்பவர் மூலிகை டீ வழங்கி வருகிறார்.

  • 19

    காரைக்குடியில் ஊரடங்கு காலத்தில் தேவையறிந்து தேநீர் தாகம் தீர்க்கும் தன்னார்வலர்!

    சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகமெங்கும் தன் எல்லையை அதிகரித்து கொண்டே செல்கிறது தமிழகத்தில் கொரேனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 29

    காரைக்குடியில் ஊரடங்கு காலத்தில் தேவையறிந்து தேநீர் தாகம் தீர்க்கும் தன்னார்வலர்!

    ஊரடங்கு காலத்திலும் காவலர்கள், தூய்மை பணியாளர்கள் அயறாது பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு உள்ளிட்டவை வழங்கினாலும் தேநீர் அருந்த கடைகள் இல்லாதது பெருங்குறையாகவே உள்ளது.

    MORE
    GALLERIES

  • 39

    காரைக்குடியில் ஊரடங்கு காலத்தில் தேவையறிந்து தேநீர் தாகம் தீர்க்கும் தன்னார்வலர்!

    இந்த குறையை போக்கும் வகையில் காரைக்குடி வ.உ.சி.ரோடு சோமுபிள்ளை தெருவை சேர்ந்த 60 வயதுடைய பஸ் ஸ்டாண்ட் பாலு என்பவர் மூலிகை டீ வழங்கி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 49

    காரைக்குடியில் ஊரடங்கு காலத்தில் தேவையறிந்து தேநீர் தாகம் தீர்க்கும் தன்னார்வலர்!

    பொது நலனில் அதிக ஆர்வம் உடைய இவர் புயல், மழை காலங்களில் தன்னால் ஆன உதவியை செய்து வருகிறார். அதே போல இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் அன்றாடம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை டீ தயாரித்து காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மனநலம் பாதித்தவர்கள், வெளியூர் செல்ல முடியாமல் தவிப்பவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு தினமும் வழங்கி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 59

    காரைக்குடியில் ஊரடங்கு காலத்தில் தேவையறிந்து தேநீர் தாகம் தீர்க்கும் தன்னார்வலர்!

    எட்டு லிட்டர் பாலில், டீத்தூள், சுக்கு, இஞ்சி, மிளகு, சித்தரத்தை, அதிமதிரம், வசம்பு ஆகியவை சேர்த்து மூலிகை டீ தயாரிக்கிறார். இந்த டீயை அருந்துவதன் மூலம் சுறுசுறுப்பும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது என்ற வாதத்தையும் முன் வைக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 69

    காரைக்குடியில் ஊரடங்கு காலத்தில் தேவையறிந்து தேநீர் தாகம் தீர்க்கும் தன்னார்வலர்!

    தினமும் மூலிகை டீ தயாரிப்பதற்கு இவரது மனைவி சாந்தியும் உறுதுணையாக இருக்கிறார். காலை 8:00 மணிக்கு ஆரம்பிக்கும் இவரது பயணம் நண்பகல் 12:00 மணிக்கு முடிகிறது.

    MORE
    GALLERIES

  • 79

    காரைக்குடியில் ஊரடங்கு காலத்தில் தேவையறிந்து தேநீர் தாகம் தீர்க்கும் தன்னார்வலர்!

    மீண்டும் மாலையும் போன் செய்து கேட்பவர்களுக்கு தயார் செய்து கொடுத்து வருகிறார் ஒரு நாளைக்கு நான்கு முறை வீட்டுக்கு சென்று சுடசுட மூலிகை டீ தயாரித்து வழங்கி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 89

    காரைக்குடியில் ஊரடங்கு காலத்தில் தேவையறிந்து தேநீர் தாகம் தீர்க்கும் தன்னார்வலர்!

    டீ வழங்குவதற்கு முன்பு தான் வைத்துள்ள கிருமிநாசினி மூலம் மற்றவர் கைகளை சுத்தம் செய்ய சொல்கிறார். முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசமும் வழங்கி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 99

    காரைக்குடியில் ஊரடங்கு காலத்தில் தேவையறிந்து தேநீர் தாகம் தீர்க்கும் தன்னார்வலர்!

    கொரோனா பயம் ஒரு பக்கம் இருந்தாலும் மனித நேயத்துடன் தேநீர் தாகம் தீர்க்கும் இவரின் வருகை துப்புரவு பணியாளர்கள் , போலீசார் , சாலையோர வாசிகளின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்துகிறது.

    MORE
    GALLERIES