இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.27 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 26,209 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 8,300 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,92,000 தாண்டியுள்ளது. டெல்லியில் புதிதாக 1,462 பேர் உட்பட 1,20 ,000க்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 3,690 பேர், மேற்குவங்கத்தில் 1,800 பேர் ஒரே நாளில் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.