முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு - அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு!

டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு - அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

  • 110

    டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு - அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு!

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 210

    டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு - அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு!

    இது குறித்து முகநூலில் பதிவிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அண்டை மாநில எல்லைகளில் உள்ள மதுக்கடைகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குவிகிறார்கள் என மக்கள் மீது அரசு பழிபோடுவதாகவும், ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பது நியாயமானதல்ல என்றும் கூறியுள்ளார். டாஸ்மாக் திறப்பால் நோய் தொற்று அதிகரிக்கவே செய்யும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 310

    டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு - அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு!

    டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏற்க முடியாத பேரழிவை ஏற்படுத்தும் முடிவு என எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த 40 நாட்களாக இல்லாமல் இருந்த சட்டம்- ஒழுங்கு பிரச்னை மீண்டும் தலைதூக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 410

    டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு - அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு!

    தமிழக மக்கள் மதுபானத்தை 40 நாட்களாக மறந்துள்ள நிலையில், அந்த சூழலை அரசு குலைக்க வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 510

    டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு - அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு!

    டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கண்டிக்கத்தக்கது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மதுக்கடைகளை திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல் எனக்கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 610

    டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு - அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு!

    அரசின் முடிவு கொரோனா பரவலை தீவிரப்படுத்தும் என்று எம்.பி தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

    MORE
    GALLERIES

  • 710

    டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு - அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு!

    கொரோனா நிவாரணத்தொகையாக ஆயிரம் ரூபாயை கொடுத்த தமிழக அரசு, அதனை வட்டியுடன் வசூலிக்கவே மதுபானக் கடைகளை திறக்கிறது என மனிதநேய மக்கள் கட்சி கருதுவதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 810

    டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு - அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு!

    தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், தாய்மார்களின் சாபத்திற்கு முதலமைச்சர் ஆளாக வேண்டாம் என்றும், முடிவை கைவிடுங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 910

    டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு - அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு!

    மதுபானங்களை வாங்குவதற்காக மக்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்வதை காரணம் காட்டி, டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முடிவெடுத்திருப்பது வேடிக்கையாக இருப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 1010

    டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு - அரசின் முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு!

    இதனிடையே டாஸ்மாக் திறப்பு, கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்த பணிகள் அனைத்தையும் சிதைத்துவிடும் என்றும், மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும் வரை மதுபான கடைகளை திறக்கக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES